Tuesday, March 26, 2013

ஆணும் பெண்ணும்....

தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் அருகருகே கூட்டம் வழிந்து கொண்டு  நான்கு வரிசைகள். மூன்றாவது வரிசையின் கடைசிக்கு சற்றே முன்னால்  பீச் போகும் டிரெயினுக்கு டிக்கட் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்தேன். ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த வரிசையை நோட்டம் விட்டுக் கொண்டே வந்தான் ஒருவன். வரிசையோடு ஒட்டி டிக்கட் கவுண்டரை நோக்கி நடந்தான். சட்டென்று வரிசையின் குறுக்கே புகுந்து கொள்ள  முயற்சி செய்தான். அங்கே நின்றிருந்தவரின் அதிர்ச்சி ரியாக் ஷனால் ஒரு நொடி தாமதித்தான். ஏற்கனவே கூட்டத்தில் கசகசத்து வியர்த்து வழிந்து கொண்டிருந்த எனக்கு இதைப் பார்த்ததும் எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ ..." யோவ்... இத்தினி பேரு நிக்கிறாங்கள்ல ...கண்ணு தெரியில ? எங்களையெல்லாம் பார்த்தா எப்படி தெரியுது ...." என்று சத்தம் போட்டு எகிறினேன். இவ்வளவு நேரம் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு பேசாமல் நின்றிருந்த நம் மக்கள், ஒரு குரல் கேட்டதும் பொங்கி எழுந்து விட்டனர். அவனை சங்கத் தமிழ் வார்த்தைகளால் வசை மாரி  பொழிந்தனர்.தாங்க முடியாமல் அவன்  தலையை தொங்கப்  போட்டுக் கொண்டு வரிசையின்  பின்னால் சென்று அமைதியாக நின்று விட்டான்.
அதே தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன். மற்றொரு நாள். ஆனால் கிழக்குத் தாம்பரம் பக்கம் இருக்கும் டிக்கட் கவுண்டர். இங்கே ஒரே வரிசை தான். அனுமார் வாழ் போல் நீண்டிருந்த வரிசையில் கடைசியில் பொய் நின்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கவுண்டருக்கு முன்னால் நின்றிருந்த ஏழெட்டுப் பேருக்கு அப்புறம் நின்றிருந்தேன். எங்கிருந்தோ வந்தனர் மூன்று பெண்கள். வட நாட்டு (அழகான) இளம் பெண்கள். அட்டகாசமாக சேலை உடுத்தியிருந்தனர். ஏதோ  பங்ஷனுக்கு சென்று விட்டு வந்திருப்பார்கள் போல. அவர்களில்   ஒருத்தி மற்ற இருவரையும் இருக்க சொல்லி விட்டு அவள் மட்டும் வரிசையை நோக்கி வந்தாள். சற்றே  தயங்கியவள் நேராக கவுண்டரை நோக்கி சென்றாள். கையில் இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்கள். " Excuse me....." என்று சத்தம் போட்டுக்  கூப்பிட்டேன். வந்தாள்."Cant you see the queue? Please go and stand at the back" என்றேன்."But its very urgent.. we need to go"      என்றாள்.(வரும் போது மூன்று பெண்களும் சத்தமாக இந்தியில் பேசி சிரித்துக் கொண்டு வந்ததைப் பார்த்தேன்). பதிலுக்கு " EVery body has their own emergency. Please follow the queue"என்றேன்.முனகிக் கொண்டெ வரிசையின் கடைசி நோக்கி சென்றாள். இவ்வளவும் நடந்து முடியும் வரை....ஒரு பய வாயத் தொறக்கல. அவளை நான் வரிசையின் கடைசிக்கு அனுப்பியதும் எனக்கு முன்னால்  நின்று கொண்டிருந்த ஒரு 40+  ஆசாமி என்னைப் பார்த்த பார்வையை ( முறைத்தே எரித்து விடுவார் போலிருந்தது)  மறக்கவே முடியாது.
நம் மக்கள் வாழ்க.

No comments:

Post a Comment